சனி பசுவான் பிறந்த தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகிறோம். அப்படிப்பட்ட சனிபகவானுக்கு ஒரு முறை தம்முடைய உயர்வான நிலை கண்டு அகங்காரம் வந்துவிடுகிறது. அகம்பாவம் விடு விடுத்து பணிவன்போடு நாராயணனை வழிபட்டால் மட்டுமே அவரின்பால் நெருங்க முடியும். அதை அறியாத சனி பகவாள் ஸ்ரீனிவாசப் பெருமாவின் இருப்பிடத்திற்கு ஒருநாள் வருகிறார். ஆணவம், அகங்காரம், மணம் முழுதும் திறைத்திருக்க, ஸ்ரீவேங்கட பெருமாள் வாசம் செய்யும் திருமலையில் கால் பதிக்கிறார். அதையறிந்த எம்பெருமான் சனியின் ஆணவத்தை அடக்க நினைக்க, அடுத்த நிமிடம் சனீஸ்வரர் திருமலையிலிருந்து தாக்கி வீசப்படுகிறார். தன்னுடைய நிலை குறித்து வருந்திய சனி பகவான், பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் சனிபகவானை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். ‘புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் எம்மை வழிபடுவோர், சனி தொல்லையில் இருந்து முழுமையாக நீங்கி அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடு வாழ்வர் என பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் வேங்கட மலையில் வாசம் செய்யும் வெங்கடேச பெருமாள். புரட்டாசி மாதத்தில், பெருமாளின் அருளோடு சனிபகவானின் ஆசியும் நிறைந்து இருப்பதால், நாம் வேண்டுகின்ற வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்.
மேலும்
புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »