பழநி மலைக்கோவிலில் ராஜகோபுரம் சேதம்; பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2024 12:10
திண்டுக்கல்: பழநி மலைக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு மட்டுமே ஆன நிலையில் ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.
நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர் என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி என மருவியது.இத்தகைய சிறப்பு மிக்க திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜன.,27ம் தேதி காலை 8:15 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு மட்டுமே ஆன நிலையில் ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. கோபுர உச்சியில் உள்ள ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். விரைந்து சரிசெய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.