Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் துர்க்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு
எழுத்தின் அளவு:
எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

பதிவு செய்த நாள்

07 அக்
2024
11:10

கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வழிபாடு நடந்தது.


முதல்நாடு கண்மாய் கரையில் எல்லைபிடாரி அம்மன் பீடம் உள்ளது. இங்கு புரட்டாசி 3வது வாரத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடக்கிறது. பலஆண்டுகளுக்கு முன் 5 ஆண்களுடன் பிறந்த பெண் ஒருவர் அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தவர் மாயமானார். பின் முதல்நாடு கிராமமக்களின் கனவில் தோன்றி ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன் எனவும், ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு நாள் ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும் எனவும், பெண்கள் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்தாண்டு புரட்டாசி 3வது வாரத்தையொட்டி வழிபாடு தேதி அறிவித்ததில் இருந்து பீடம் அமைந்த பகுதிக்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாக்காக அனைத்து வீடுகளிலும் அரிசி, பணம் வசூலித்து பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 100 ஆடுகளை பலியிட்டு படையல் இடப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பனைஓலையால் செய்த மட்டையில் உணவு பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைபொருட்கள் அனைத்தும் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இவ்விழாவில் கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar