Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ... வளர்பிறை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு வளர்பிறை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் நவராத்திரி கொலுவில் மத நல்லிணக்கம்!
எழுத்தின் அளவு:
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் நவராத்திரி கொலுவில் மத நல்லிணக்கம்!

பதிவு செய்த நாள்

07 அக்
2024
11:10

கோவை; ‘‘கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார். வழிபடும் முறைதான் வேறு. அனைவரும் ஒரே சக்தியைதான் வழிபடுகிறோம்,’’ என்கிறார் மதநல்லிணக்க கொலு வைத்திருக்கும் நம் வாசகர் விஜயலட்சுமி ரமேஷ்குமார். தினமலர் மற்றும் அதிசியா நிறுவனம் சார்பில், நவராத்திரி பொம்மை கொலு விசிட், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதிகளில் நடந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் ஆன்மிக வாழ்க்கை நெறிமுறைகளை பிரதிபலிக்கும் கருத்துள்ள பொம்மைகள், கடவுள் சிலைகள் ஏராளம் இருந்தன. இதில் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் பழமையான கொலு பொம்மைகளும், இடம் பெற்றிருந்ததுதான் சிறப்பு.

அனைத்து கடவுளர் கொலு; நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த வாசகியர் ஆர்த்தி ராஜேஷ், தாட்சிமிதா, சித்ரா மூர்த்தி, மசக்காளிபாளையம் பகுதியில் வசிக்கும் வாசகி மஞ்சுளா கைலாஷ், சிங்காநல்லுார் வாசகியர் ரமா சுப்பிரமணியம், மகாலட்சுமி, கோத்தாரி நகரில் வசிக்கும் வாசகி ஷோபனா உள்ளிட்ட பலர், ஆன்மிக மரபை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளை வைத்து அசத்தி இருந்தனர். மீனா எஸ்டேட் பகுதியில் வசிக்கும், வாசகி விஜயலட்சுமி ரமேஷ்குமார், அனைத்து மத கடவுள் உருவ பொம்மைகளையும் கொலுவில் வைத்து, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சமத்துவ கொலு வைத்து, அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறார். அவர் கூறுகையில், ‘‘கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார். நாம் வழிபடும் முறை வேறாக இருக்கலாம், ஆனால் அனைவரும் ஒரே சக்தியைதான் வழிபடுகிறோம்,’’ என்றார். இன்று பீளமேடு மற்றும் விளாங்குறிச்சி பகுதிகளில், தினமலர் குழுவினர் கொலு விசிட் வருகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar