Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவான்மியூரில் சிருங்கேரி ... கோவில்பாளையம் ராஜகணபதி கோவிலில் 14ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் கோயில் தங்க விமானத் திருப்பணி நவ.14ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் கோயில் தங்க விமானத் திருப்பணி நவ.14ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 நவ
2024
04:11

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர்  சவுமியநாராயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமான தங்க விமானத் திருப்பணியை முன்னிட்டு தங்கத் தகடு ஒட்டும் பணி நவ.14 ல் துவங்குகிறது. திருப்பணி துவங்கி 18 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தகடு ஒட்டும்பணி துவங்குகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டாங்க விமானம் புராண,வரலாற்று சிறப்பு மிக்கது. கோயில் விமானங்களில் அரிதான இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு பதிக்க திருப்பணியை தேவஸ்தானம் மற்றும் சௌமிய நாராயணன் எம்பெருமானார் சாரிட்டபிள் ட்ரஸ்ட் ஆகியோரால் 18 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. 3448 சதுர அடி பரப்பிலான இந்த விமானத்திற்கு தங்க தகடு வேய சதுர அடிக்கு 22 கிராம் தங்கம் தேவைப்பட்டது. முதற்கட்டமாக விமான சுதை வேலைப்பாடுகளில் செப்புத் தகடு பொருத்துவதற்கான பணி நடைபெற்றது. பின்னர் தங்கம் சேகரிப்புப்பணி தொய்வடைந்தது. அந்நிலையில்  2022 ல் மதுரை ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிறுவனர் டாக்டர் சொக்கலிங்கம் தரப்பினர் 8 கிலோ வரை தங்கம் வழங்கி திருப்பணியை வேகப்படுத்தினர். தொடர்ந்து திருப்பணிக்கு தேவையான தங்கத்தை உபயதாரர்கள், சுற்று வட்டாரக் கிராமத்தினரும்  வழங்கத் துவங்கினர். திருப்பணிக்கான அறநிலையத்துறை துணை ஆணையரும் நியமிக்கப்பட்டார். விமானத்தின் திருப்பணிக்கு மொத்தம் 77 கிலோ தங்கள் தேவைப்பட்டது. திருப்பணி விமானத்தின் முதல்நிலை, மத்திமநிலை,அடித்தட்டு என்று மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டது. தற்போது உபயதாரர்கள் மூலம்  29 கிலோ 813 கிராம் சேர்ந்துள்ளது. சேர்ந்துள்ள  தங்கத்தை வைத்து விமானத்தின் தங்கக் கலசத்தின் கீழ் முதல்நிலை திருப்பணி துவங்க உள்ளது. அதற்கான  அரசு அனுமதிக்கு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால்  தங்க விமானத் திருப்பணி நவ.14 ல் காலை 9:30 மணிக்கு மேல் 10:50 மணிக்குள் துவங்க உள்ளது.   சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பணியை துவக்கி வைக்கிறார். முதல்நிலை திருப்பணி நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த இரு நிலைகளுக்கான திருப்பணிக்கு தங்கம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar