Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை காட்டு பாதையில் போதிய ... பம்பையில் ரூ.300 கட்டணத்தில் 24 மணி நேரமும் இருமுடி கட்டும் வசதி பம்பையில் ரூ.300 கட்டணத்தில் 24 மணி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
நெரிசல் இல்லாத நிலையிலும் சபரிமலையில் வருமானம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
நெரிசல் இல்லாத நிலையிலும் சபரிமலையில் வருமானம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2024
07:11

சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் இல்லாத நிலையிலும் காணிக்கை வருமானம் அதிகரித்துள்ளதால் தேவசம்போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவ.,16-ல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது. தினமும் 80 ஆயிரம் பக்தர் களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் சராசரியாக 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வராமல் உள்ளனர். இதனால் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் தரிசனம் நடத்தி ஊர் திரும்புகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும் காணிக்கை வருமானம் அதிகரித்துள்ளது. நவ., 20 வரை காணிக்கையாக ரூ. 3.18 கோடி, அரவணை விற்பனையில் ரூ.9.52 கோடி, அப்பம் விற்பனையில் ரூ.1.26 கோடியும் கிடைத்துள்ளது. அரவணை விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.2.16 கோடி அதிகமாகும். அப்பம் விற்பனை ரூ.22.40 லட்சம் அதிகரித்துள்ளது. கவுண்டர்களில் கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் தேவையான பிரசாதங்களை பெற்று செல்வதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சபரி மலையில் அப்பம் பிரசாதத்தில் காளான் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியானதை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் மறுத்துள்ளார். அப்பத்தின் கால அளவு ஏழு நாட்கள். அப்பம் கவுண்டரில் இருந்து வாங்கப்பட்டபோது இது காணப்படவில்லை. பிரசாதத்தை இருமுடி கட்டில் வைத்து கட்டி வீட்டில் கொண்டு போய் பல நாட்களுக்குப் பின் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் கூட்டு சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar