Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பயன்படுத்தப்படும் ... புல்மேடு வழியாக 10 நாட்களில் 6598 பக்தர்கள் நடந்து சென்று சபரிமலையில் தரிசனம் புல்மேடு வழியாக 10 நாட்களில் 6598 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 18 படிகளில் நின்று போலீசார் போஸ்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18 படிகளில் நின்று போலீசார் போஸ்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

27 நவ
2024
11:11

சபரிமலை; சபரிமலையில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்படாமல் இருக்க, தேவசம் போர்டும், போலீசும் பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி விடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வந்த, 30 போலீசார் கடந்த 25-ம் தேதி பணி நிறைவு பெற்று ஊர் திரும்பினர். முன்னதாக தாங்கள் பணியாற்றிய, 18 படிகளில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது நாளிதழ், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இது, சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி பைஜுவிடம், சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் அதிகாரியான கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் விளக்கம் கேட்டுள்ளார். விளக்கம் கிடைத்த பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள உயர்நீதிமன்றம் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில டி.ஜி.பி.,க்கும், உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனருக்கும் உத்தரவிட்டுள்ளது.


சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்: மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை. நீண்ட நேரம் வாடாமல் இருப்பதால், இந்த பூக்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பூக்களை பயன்படுத்தக்கூடாது, ஐதீக முறைப்படியான பூக்கள் பயன்படுத்துவதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும். அப்பம் மற்றும் அரவணை தரம் குறித்து கண்காணிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்படுகிறார். சபரிமலையில் மரக்கிளை உடைந்து விழுந்து, கர்நாடகாவை சேர்ந்த சஞ்சு என்ற பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோட்டயம் அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக, கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில், பத்துக்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்களை ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடாது. இதை பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். பக்தர்களின் கார்களை, 24 மணி நேரத்துக்கு அதிகமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar