Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூரில் மஹா மந்திர தியானம் ... திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பரங்குன்றம் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பிரம்மோற்சவம்; சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா
எழுத்தின் அளவு:
திருச்சானூர் பிரம்மோற்சவம்; சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா

பதிவு செய்த நாள்

05 டிச
2024
12:12

திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் இன்று சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா வந்து அருள்பாலித்தார்.


திருச்சானூர் பத்மாவதி தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் ( தேரில் ) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு  மாட வீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில்  வடம் பிடித்து இழுத்து செல்ல தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் கோவர்தன கிரி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் உலா வந்த அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.


பத்மாவதி தாயார் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமி  11.45 மணியளவில்  மகர லக்னத்தில் பஞ்சமி தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக கோயிலைச்சுற்றி 160  இடங்களில் அன்னப்பிரசாத கவுன்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 188 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளத்தில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த பின் 48  மணி நேரத்திற்கு அந்த புனிதம் இருக்கும் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் பொறுமையாக காத்திருந்து புனித நீராடும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பஞ்சமி தீர்த்ததிற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் அதிகாரிகள் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar