Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீபம்; ஜொலித்தது தாயார் சன்னதி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அஷ்ட பைரவ யாகத்துடன் சம்பக சஷ்டி நிறைவு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அஷ்ட பைரவ யாகத்துடன் சம்பக சஷ்டி நிறைவு

பதிவு செய்த நாள்

07 டிச
2024
07:12

திருப்புத்தூர்; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு  அஷ்ட பைரவ யாகத்துடன் 6 நாட்கள் நடந்த சம்பக சஷ்டி விழா xநிறைவடைந்தது. 


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் அமர்ந்த, யோகநிலையில் அருள்பாலிக்கிறார். யோகபைரவருக்கு ஆறுநாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெறும். அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்த உலகை விடுவிக்க குமார ரூபமாக இருந்து அந்தகாசூரன், சம்பகாசூரன் ஆகியோரை பைரவர் வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும், சம்பக சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று  சம்பக சஷ்டி விழா துவங்கி 6  நாட்கள் நடைபெறும்.  டிச.1 ல் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் அஷ்டபைரவ யாகம் நடந்து விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை,மாலை இரு காலங்களில் அஷ்ட பைரவயாகத்தை சிவாச்சார்யர்கள் நடத்தினர். 10 ம் கால யாகத்தில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்று தீபாராதனையை தரிசித்தார். நிறைவு நாளான நேற்று காலையில் யாகம் நடந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர்  மாலை 6:00 மணிக்கு 12 ம் கால யாகம் துவங்கியது. யாகம் நிறைவுக்கு பின் பூர்ணாகுதியைத் தொடர்ந்து  யாகசாலையிலிருந்து கலசங்கள் சிவாச்சார்யர்களால் பிரகாரம் வலம் வந்து மூலவர் யோகபைரவர் சன்னதிக்கு  சேர்க்கையானது. பின்னர் தொடர்ந்து 16 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கவசத்தில் சந்தனக் காப்பில் சுவாமி அருள்பாலிக்க, சிறப்பு பூஜைகள் நடந்து அலங்காரத் தீபாரதனையை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாகுழு மற்றும் தேவஸ்தானத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar