Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த ... சபரிமலை பக்தர்களுக்கு உதவ வனத்துறை சார்பில் அய்யன் ஆப் சபரிமலை பக்தர்களுக்கு உதவ வனத்துறை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: பம்பையில் இருந்து ஏழு கேரள அரசு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: பம்பையில் இருந்து ஏழு கேரள அரசு பஸ்கள் இயக்கம்

பதிவு செய்த நாள்

12 டிச
2024
04:12

மூணாறு; பம்பையில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக குமுளி மற்றும் தமிழகத்திற்கு ஏழு கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு பம்பையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி 40 பக்தர்களை கொண்ட குழுக்களுக்கு உடனடி பஸ் சேவை, பம்பை திரிவேணியில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று வர இரண்டு கட்டணம் இல்லா பஸ்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. மண்டல, மகர விளக்கு உற்ஸவம் துவங்கி நாள் முதல் டிச.10 வரை பம்பையில் இருந்து பல பகுதிகளுக்கு 61,109 தொடர் சர்வீஸ்கள், தொலை தூர பகுதிகளுக்கு 12,997 சர்வீஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பம்பையில் இருந்து குமுளி மற்றும் தமிழகத்திற்கு ஏழு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் 2, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒன்று, குமுளிக்கு 2 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆன் லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தவிர பம்பை பஸ் ஸ்டாண்டில் முன் பதிவு வசதி உள்ளது. புதிதாக இயக்கப்படும் பஸ்கள் நேரம் உள்பட பிற தகவல்களை 0473-5203445 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar