Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரஜோதிக்கு வனத்துறை சார்பில் ... சபரிமலையில் குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் புள்ளுவன் பாட்டு சபரிமலையில் குழந்தைகளின் தோஷம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் பக்தர்கள்; தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் பக்தர்கள்; தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

சபரிமலை; தொடர்ந்து அலை மோதும் பக்தர்களால் சபரிமலை திணறி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து படியேறி வினாடி நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த டிசம்பர் 30 மாலை 4:00 மணிக்கு திறந்தது. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டதால் நிலக்கல்லிலும், பம்பையிலும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 31-ம் தேதி பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்ததால் பம்பையில் பக்தர்கள் தடுப்பது கைவிடப்பட்டது. எனினும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. பத்தனம்திட்டா - நிலக்கல் - சாலக்கயம் பாதையிலும், எருமேலி - கரிமலை - வலியான வட்டம் வழியிலான பெருவழி பாதையிலும், சத்திரம் - புல் மேடு பாதையிலும் பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பம்பையில் இருந்து மலையேறி பதினெட்டு படிகளில் ஏறுவதற்கான கியூ கடந்த ஒரு வாரமாக எப்போதும் மரக் கூட்டத்தை தொட்டு காணப்படுகிறது. சில நாட்களில் இந்த கியூ சபரி பீடம் வரை காணப்பட்டது. நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. இதனால் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து தான் 18 படிகளில் ஏறுகின்றனர். பின்னர் சன்னிதானத்தில் பிளை ஓவர் வழியாக ஸ்ரீ கோயில் முன் வரும் போது வினாடி நேர தரிசனம் தான் இவர்களுக்கு கிடைக்கிறது. எனினும் ஐயப்பனை வணங்கிய ஆனந்தத்தில் இவையெல்லாம் ஒரு சிரமமே இல்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar