Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உளுந்து மாவில் சிவ உருவம் செய்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உளுந்து மாவில் சிவ உருவம் செய்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
10:01

 காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலமூர்த்திக்கு ( ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு)  உளுந்து மாவினால் சிவபெருமானின் உருவம் செய்து, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.  பின்னர், மூலவருக்கு (ஆண்டில் இந்த ஒரு நாள்)  வெந்நீரால் அபிஷேகம் செய்தனர்.  அதன் பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தீப தூபம் சமர்ப்பிக்க பட்டது . பின்னர், நடராஜர் சுவாமி நகரில் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் இறைவனை தரிசித்து, கற்பூர ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தனர். 


இது குறித்து கோயில் வேத பண்டிதர் மாருதி சர்மா சுவாமிகள் கூறியதாவது; ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மூலவருக்கும், நடராஜ சுவாமிக்கும் சாஸ்திர முறைப்படி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன‌. தட்சிணாயனம் முடிந்து உத்தராயணம் தொடங்கும் நாள். தனுர் மாசத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரம், இறைவனுக்கு மிகவும் பிரியமான திங்கட்கிழமை என்பதால் மிகவும் உகந்த நாளாகும் அதிலும் போகிப் பண்டிகை என்பதால் இந்த நாள் மிக அரிதாகவே வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பக்தர்கள் மகாசிவராத்திரி அன்று லிங்கோத்பவத்தை எவ்வாறு தரிசிக்கிறார்களோ அதே போல் இன்றும் மூலவர் சன்னதியில் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கருவறையில் உள்ள இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar