Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் பக்தர்கள் ... திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் சீற்றத்தால் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கின; பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
கடல் சீற்றத்தால் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கின; பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
05:01

தேவிபட்டினம்; கடல் சீற்றத்தால் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடல் நீர்மட்டம் உயர்ந்து அலைகள் அதிகளவில் எழுகின்றன. கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று அதிகாலை முதல் நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. மூன்று நவக்கிரகங்கள் மட்டுமே தண்ணீருக்கு மேல் லேசாக தெரிந்த வண்ணம் இருந்தன. இதனால் தரிசனத்திற்காக நவபாஷாணம் வந்த பக்தர்கள் முழுமையாக அனைத்து நவக்கிரகங்களையும் பார்த்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே நடைமேடை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நவக்கிரகங்களை நீரில் இறங்கி சுற்றி வரவும், கடலில் இறங்கி நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar