Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் வீதியில் மாடுகள் ... 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த பழமை வாய்ந்த பெருமாள் கோயில்; சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த பழமை வாய்ந்த பெருமாள் கோயில்; சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
04:01

திருவாடானை; திருவாடானை அருகே உள்ள புதுப்பையூரில் பழமை வாய்ந்த மாதவப் பெருமாள் கோயில் புதர் மண்டியுள்ளது. புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவாடானை அருகே உள்ள புதுப்பையூரில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மாதவப் பெருமாள் கோயில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோயிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பணிகள் துவங்கியது. பள்ளம் தோண்டும் போது  பூமிக்கடியில் இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன பெருமாள் மற்றும் சில சிலைகள் கிடைத்தது.


வருவாய்த் துறையினர் அந்த சிலைகளை மீட்டனர். அத்துடன் புதுப்பிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. கருவறையில் இருந்த மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் தற்போது சிறிய தகர கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுப்பையூர் கிராம மக்கள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யபட்டு பணிகள் துவங்கியது. ஐம்பொன் சிலைகள் கிடைத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அதற்கான பணிகள் துவங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது கோயில் வளாகத்தில் செடிகள் அடர்ந்துள்ளது. பண்டைய காலத்தில் இக்கோயிலில் திருவிழாக்கள் சிறப்பாக நடந்துள்ளது. கோயில் முன்புள்ள இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த இடத்தை கூத்தாடி பொட்டல் எனக் கூறுவார்கள். தற்போது கோயில் இருந்த இடம் தெரியாமல் புதர் மண்டியும், சுவாமி சிலைகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar