வசந்த பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 10:02
கோவை; கோவை சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தை மாதம் வசந்த பஞ்சமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.