கடலுார்; வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11ம் தேதி 154வது தை பூச விழா நடக்கிறது. இதையொட்டி இன்று வடலுாரில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வள்ளலார் பிறந்த மருதுார், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. நாளை 11ம் தேதி ஜோதி தரிசனம் நடக்கிறது. சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு முதல் 7 கால் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் காலை 10:00 மணி, 1:00 மணி, இரவு 7:00 மணி மற்றும் 10:00 மணி, 12ம் தேதி அதிகாலை 5:30 மணி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் 13ம் தேதி மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திருஅறை சரிசன பெருவிழா நடக்கிறது.