Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளியடி குருநாதருக்கு குரு பூஜை சுவாமி, அம்மன் புறப்பாடு : இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு சுவாமி, அம்மன் புறப்பாடு : இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
06:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.


பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 17ம் தேதி இரவு, அணி எடுப்பு நிகழ்ச்சியும்; நேற்று இரவு, கரியகாளியம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. அங்கு இருந்து,  கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, மாரியம்மன் கோவில் முன் நடப்பட்டது. கம்பம் நடுவதற்கு முன், பெண்கள் கோவில் முன்பாக கும்மியாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை வைத்து, உப்பு கொட்டியும் பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு அபிஷேக, அலங்கார வழிபாடு மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசிநாள் அபிஷேகம்; 25ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வெளிப்பூவோடு துவங்குகிறது. இரவு,11:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது.  மார்ச் 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி., பூவோடு; 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 10ம் தேதி இரவு, மஹா  அபிஷேகமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar