Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ... கந்தசுவாமி கோவில் மாசி பிரமோத்சவ தேரோட்டம்; பக்தர்கள் வெள்ளத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரமோத்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்தினகிரி முருக கடவுளுக்கு தமிழில் நன்னீராட்டு குடமுழுக்கு விழா
எழுத்தின் அளவு:
ரத்தினகிரி முருக கடவுளுக்கு தமிழில் நன்னீராட்டு குடமுழுக்கு விழா

பதிவு செய்த நாள்

10 மார்
2025
12:03

கோவை; சரவணம்பட்டியில் உள்ள கரட்டுமேட்டில், ரத்தினகிரி குமரக்கடவுள் முருகனுக்கு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது.

கடந்த வியாழனன்று கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நான்கு நாட்கள் வேள்விகள் நடந்தன. மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சியுடன் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விழா துவங்கியது. பங்கேற்றவர்கள் காவடி எடுத்து பாடி வந்து, ஆறாம் கால வேள்வியில் பங்கேற்றனர். காலை 5:30 மணிக்கு பாதவிநாயகர், இடும்பன், கடம்பன், கன்னிமார், வன்னீஸ்வரர், நாகசக்தி அம்மன், திரிசூலம், நுழைவு வாயில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு ரத்தினகிரி குமரக்கடவுள், மருதாசலக்கடவுளுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், மருதாசல அடிகள், சிவஞானபாலய சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள், முத்து சிவராமசாமி அடிகள் உள்ளிட்டோர், திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தினர். பெருந்திரு மஞ்சனம், அலங்கார பூஜை, பதின்மங்கல காட்சி, பேரொளி வழிபாடு, மந்திர திருநீறு பிரசாதம் வழங்குதல் மதியம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருவீதி உலா, பள்ளியறை வழிபாடுகள் நடந்தன. நாள் முழுவதும் அன்ன தானம் நடந்தது. திருக்குட நன்னீராட்டு வேள்வி வழிபாடுகளை, சிரவையாதின அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை, திருக்கோவில் பரிபாலன சபை, அறங்காவலர் குழு, இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை யொட்டி, தெப்பல் உற்சவம் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மலையாண்டிபட்டணத்தில், மதுரை வீரன் சமேத பொம்மி அம்மாள் வெள்ளை அம்மாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar