பதிவு செய்த நாள்
11
மார்
2025
11:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா இன்று கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு 69 வது மாசி பங்குனி திருவிழா இன்று காலை கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டினர். மார்ச் 18 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 19 ஆம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 20 இரவு அம்மன் திருவீதி உலாவும் 21 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.