Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் ... ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 மார்
2025
12:03

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பல்லவ உத்சவம் ஏழு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான உத்சவம் இன்று துவங்கியது.


உத்சவத்தையொட்டி, நேற்று, மாலை 6:30 மணிக்கு சேனை முதன்மையார் திருமலைக்கு எழுந்தருளினார். அங்கு சேனை முதன்மையாருக்கு சிறப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து திருமலையில் இருந்து, சேனை முதன்மையார் நம்மாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு திருவாராதனம், நிவேதனம், நம்மாழ்வாருக்கு சிறப்பு மரியாதை நடந்தது. பல்லவ உத்சவத்தின் முதல் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு ப்ரணதார்த்தி ஹர வரதர், பெருமாள், திருமலையில் இருந்து நுாற்றுக் கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு பரிமளம் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சாற்றப்பட்டு, நிவேதனம், தீர்த்தம் சடாரி, திரை சேர்த்தல் நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு திரை திறத்தல், பஞ்சாங்க படமும், மாலை 6:30 மணிக்கு பெருமாள், திருவாராதனம், நிவேதனம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு ப்ரணதார்த்தி ஹர வரதர், நுாற்றுக்கால் மண்டபத்தில் இருந்து கண்ணாடி அறைக்கு எழுந்தருள்கிறார். இரவு 7.30 மணிக்கு படியேற்றமும், தொடந்து பெருமாள் திருவடி கோவில் புறப்பாடும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில் உள்ள கண்ணாடி அறைக்கு செல்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை கிரிவலப் பாதையில் ... மேலும்
 
temple news
அரூர்; அரூர் அருகே, தீர்த்தமலை  தீர்த்தகிரீஸ்வரர்  மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
திருப்பூர்; பங்குனி மாத சுவாதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவில் உபகோவிலான மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் 1008 பால்குடம் உற்சவ சாந்தி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar