Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணிமுக்தாறு ஊற்று தண்ணீரில் குளிக்க ... சபரிமலை முன்பதிவு: டிச.26 வரை நிறைவு! சபரிமலை முன்பதிவு: டிச.26 வரை நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சயபாத்திரமாய் தித்திக்கும் அதிசய தீர்த்தம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 டிச
2012
11:12

போடி அருகே கோடாங்கிபட்டி விருப்பாட்சி ஆறுமுக நாயனார் கோயில் முன்பு ஆண்டு முழுவதும் அட்சய பாத்திரமாய் கொட்டிக்கொண்டிருக்கிறது அதிசய தீர்த்தம்.இங்கு ஆறுமுக நாயனார், மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த இடத்தில் ஆறுமுகனின் அதிசயத்தால் காலமெல்லாம் வற்றாத அட்சய பாத்திரமாய் கொட்டுகிறது ஊற்று நீர். இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஆறுமுக நாயனார் திரு உருவச் சிலையை பிரதிஷ்டை செய்ய அஸ்திவாரம் தோண்டிய போது, கர்ப்ப கிரகத்திலிருந்து தண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ஒரே சீராக தண்ணீர் பொங்கி வழிகிறது. இந்த தீர்த்த நீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, என பல ஆராய்ச்சியாளர்கள் பலதரப்பட்ட ஆய்வுகளை நடத்திவிட்டனர். எந்த விடையும், இதுவரை கிடைத்தபாடில்லை.

அருகில் உள்ள கொட்டக்குடி ஆறு, தாழ்வான இடத்தில் தான் உள்ளது. மழைக் காலத்தில் மட்டுமே ஆற்றில் நீர் வரும், மற்ற நாட்களில் வறண்டே காணப்படும். மேடான பகுதியில் இருக்கும் இந்த தீர்த்த தொட்டியில்இருந்து மழைக் காலம், கோடை காலம் என்றில்லாமல் எப்பொழுதும் ஜில்லென்று நீர் வந்துகொண்டிருக்கிறது. கோயில் பூஜாரி பசவலிங்கம் கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவியபோதும், அதிசயத்தக்க வகையில் தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீராடி, ஆறு வணங்கிச் செல்கின்றனர், என்கிறார். ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, இங்கிருந்து விரதத்தை தொடங்குகின்றனர். தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள், இரவு நேரத்தில் இங்குள்ள மண்டபத்தில் தங்கி அதிகாலையில் தீர்த்தநீராடி ஆறுமுகனை தரிசித்து செல்கின்றனர். தோஷங்கள் நீங்கவும், சரும வியாதிகள் நீங்கவும் பலர் வந்து நீராடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar