Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ... ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்; சிறப்பு அபிஷேகம் ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோவிலில் உகாதி சிறப்பு பூஜை; பஞ்சாங்கம் வாசிப்பு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோவிலில் உகாதி சிறப்பு பூஜை; பஞ்சாங்கம் வாசிப்பு

பதிவு செய்த நாள்

31 மார்
2025
12:03

காளஹஸ்தி; தெலுங்கு ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் உகாதி (விஸ்வாவஸு நாம ஆண்டு ) கொண்டாட்டங்கள், ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றன. விஸ்வாவஸு நாம வருடத்தை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோயில் சிறப்பாக பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படட்டிருந்தன. கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தன. கோயில் வளாகத்தில் அனைத்து பார்த்தாலும், மின் விளக்குகளின் ஒளியின் மத்தியில் வண்ணமயமான மலர்களால் கோயில் வளாகம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. 


தெலுங்கு புத்தாண்டு உகாதியையொட்டி, காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி மற்றம் துணை சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு உகாதி பச்சடியை பிரசாதமாக வழங்கப்பட்டது.  பின்னர், மாலை 4 மணிக்கு,  (தெலுங்கு) புத்தாண்டின் பஞ்சாங்கம் ஷ்ரவணம் நடைபெற்றன. தொடர்ந்து சாமி அம்மையார்கள் நகரில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 


வேத பண்டிதர் மாருதி சர்மா சுவாமிகள் கூறியதாவது; ஒவ்வொரு தெலுங்கு வருடத்திற்கும் ஒரு பெயர் உண்டு. இந்த புத்தாண்டின் பெயர் விஸ்வவசு நாம ஆண்டு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2025 அன்று தொடங்கி உள்ளது. இந்த புத்தாண்டடு பிரபஞ்சத்துடன் தொடர்புடையது. இந்த காலகட்டத்தில் போதுமான வருமானம் பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த புத்தாண்டில் பலர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரும் என்றும் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar