கூத்தாண்டவர் கோவில் திருவிழா துவங்கியது; காப்புக்கட்டிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 12:04
பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருநங்கைகள் முன்னிலையில் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநங்கைகள் அமைப்பு நிர்வாகிகள் கார்த்திகா, அம்மு ஆகியோர் தலைமையில், கோவில் பூஜாரி ஆசை பூஜைகள் செய்தார். தொடர்ந்து பூஜைகள் மற்றும் கள பலியிடுதல், திருநங்கைகள் பங்கேற்கும் தாலி கட்டும் மற்றும் தாலி அறுப்பு நிகழ்வுகளும் நடைபெறுகிறது. திருநங்கைகள், வனக்காவலர் பிரபு மற்றும் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.