Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவை போற்றி வணங்குவோம் விதுசேகர ... அயோத்தி குழந்தை ராமர் நெற்றியில் சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம் அயோத்தி குழந்தை ராமர் நெற்றியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்
எழுத்தின் அளவு:
 கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2025
08:04

பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இதன் ஆண்டு திருவிழா கடந்த நாலாம் தேதி வனக்காவலர் பிரபு, பிந்து தலைமையில் குத்து விளக்கு ஏற்றி திருநங்கை கார்த்திகா தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன மறுநாள் நாகக்கன்னி பூஜை, முனி பலி பூஜைகள் நடந்தது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை நாலு மணிக்கு ஐ எம் சி கூத்தாண்டவர்கள் கண் திறப்பு பூஜை, தொடர்ந்து ஆடு, சேவல் பலி பூஜைகள் நடந்தது. அதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவி நிஷா, வக்கீல் சௌமியா சாஸ், கார்த்திகா, பிங்கி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருநங்கைகளின் சார்பில் திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டினார். தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டதுடன், தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு திருநங்கைகள் சார்பில் அருளாசி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், களபலி பூஜை நடத்தப்பட்டு தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனைப் பார்த்த பெண்கள் கதறி அழுதது அனைவரும் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. தொடர்ந்து மக்கள் பங்கேற்ற பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி தலைமையில், தலைவர் கணேஷ் செயலாளர் கூத்தையா, பொருளாளர் சண்முகம், ஆலோசகர் சி. ஆசை, துணை ஆலோசகர் முருகன் மற்றும் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar