Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவை போற்றி வணங்குவோம் விதுசேகர ... அயோத்தி குழந்தை ராமர் நெற்றியில் சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம் அயோத்தி குழந்தை ராமர் நெற்றியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்
எழுத்தின் அளவு:
 கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2025
08:04

பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இதன் ஆண்டு திருவிழா கடந்த நாலாம் தேதி வனக்காவலர் பிரபு, பிந்து தலைமையில் குத்து விளக்கு ஏற்றி திருநங்கை கார்த்திகா தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன மறுநாள் நாகக்கன்னி பூஜை, முனி பலி பூஜைகள் நடந்தது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை நாலு மணிக்கு ஐ எம் சி கூத்தாண்டவர்கள் கண் திறப்பு பூஜை, தொடர்ந்து ஆடு, சேவல் பலி பூஜைகள் நடந்தது. அதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவி நிஷா, வக்கீல் சௌமியா சாஸ், கார்த்திகா, பிங்கி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருநங்கைகளின் சார்பில் திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டினார். தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டதுடன், தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு திருநங்கைகள் சார்பில் அருளாசி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், களபலி பூஜை நடத்தப்பட்டு தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனைப் பார்த்த பெண்கள் கதறி அழுதது அனைவரும் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. தொடர்ந்து மக்கள் பங்கேற்ற பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி தலைமையில், தலைவர் கணேஷ் செயலாளர் கூத்தையா, பொருளாளர் சண்முகம், ஆலோசகர் சி. ஆசை, துணை ஆலோசகர் முருகன் மற்றும் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தமிழ் புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை விஷு கனி தரிசித்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக அமையும். பங்குனி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சண்டிகர்,; அறுவடைத் திருநாளான ‘பைசாகி’ பண்டிகை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் மற்றும் ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில், 1,500 ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar