Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர விழா : ராமேஸ்வரம் ...  சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு; இன்று சித்திரை விசு கால பூஜை துவக்கம் சபரிமலையில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரை கி.மீ., மேடு, இறக்கத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அரை கி.மீ., மேடு, இறக்கத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
06:04

குன்னூர்; குன்னூர் பேரட்டி கிராமத்தில், நூற்றாண்டு காலமாக, பங்குனி உத்திர திருவிழாவில், ஆண்கள் மட்டுமே, மேடு மற்றும் இறக்கத்தில் அரை கி.மீ. தூரம் அங்கப் பிரதட்சணம் வழிபாடு பரவசத்தை ஏற்படுத்தியது. முருகனுக்கு, சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படும் பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில், முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் நேர்த்திக்கடன்கள பக்தர்கள் செலுத்துகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே பேரட்டி கிராமத்தில் கடந்த நூற்றாண்டுகளாக பால முருகன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவது பக்தி பரவசத்தை ஏற்படுத்துகிறது. வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டம் சூழ்ந்த இடத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, படுக இன மக்கள் பாரம்பரிய வெள்ளையுடை அணிந்து வழிபாடு நடத்தினர். இதில் முதல் மொட்டையிடுதல், நடத்தப்படுகிறது. மேலும், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் காவடி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக, விநாயகர் கோவிலில் இருந்து முருகன் கோவில் வரை  அரை கி.மீ. தூரம் வரை மேடு மற்றும் இறக்கத்தில் ஆண்கள் மட்டும் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தியது அனைவரையும் பரவசப்படுத்தியது. இதில் வெள்ளை யுடையை தரையில் விரித்து அதில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம், தேர் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் சுவாமி பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நரசிம்மர் கோவில் பங்குனி தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் இன்று கோரதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar