Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம துாதனாக சென்ற அனுமன் சீதையின் ... குன்றத்துார் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா விமரிசை குன்றத்துார் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
11:04

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஏப்.3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும் இரவு வீதியுலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாண பட்டுப்புடவை, வேட்டி, திருமாங்கல்யம், மங்கலப் பொருட்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெற்று, பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளுலும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு மாலை மாற்றுதலும் நடந்தது. ஆடிப்பூர பந்தல் மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள ஸ்ரீவாரி பிரபு பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் சாற்றப்பட்டது. பின்னர் பெரியாழ்வார் முன்னிலையில் மாலை 6:21 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அறங்காவலர்கள் மனோகரன், உமாராணி, நளாயினி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் ஆவிணிப்பட்டி பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர் கோயிலில்  சுதர்ஷன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar