மானாமதுரை சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 05:05
மானாமதுரை; மானாமதுரை சுந்தராபுரம் அக்ரகாரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு பால், பன்னீர்,சந்தனம், நெய்,திரவியம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் விநாயகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அர்ச்சகர்களால் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள், அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆராதனைகளும், பூஜைகளும் நடந்தன. வருஷாபிஷேக விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.