திருப்பதி அலிபிரி நடைபாதையில் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 05:05
திருப்பதி; அலிபிரி நடைபாதையை கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ஆய்வு செய்தார். நேற்று புதன்கிழமை திருமலை அலிபிரி நடைபாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் முதல் ஏழாவது மைல் வரையிலான வனப்பகுதியை தேவஸ்தான கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி C.H. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார். நிகழ்வில், வனத்துறை மற்றும் மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, நடைபாதையில் பொருத்தப்பட்டுள்ள நிலையான கேமராக்கள் மற்றும் மோஷன் சென்சார் கேமராக்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த அவர், வனப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல் பிரச்சினையை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கினார். இதில் விஜிலென்ஸ் விஜிஎல்ஏ ராம் குமார், வன சரக அதிகாரி தோரசாமி, துணை வன சரக அதிகாரி மதுசூதன் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.