சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 2ம் நாள் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2025 11:05
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று இரண்டாம் நாள் தேரோட்டம் நடந்தது. பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா கடந்த, 12ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, வேல் புறப்பாடு, கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல், கொடியேற்றம், திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் மற்றும் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம், தேரோட்டம் துவங்கியது.முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மதுரைவீரன் கோவில் வீதியில் முதல் நாள் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று இரண்டாம் நாளான தேரோட்டம் நடைபெற்றது. புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் கந்தசாமி, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று மூன்றாம் நாள் தேரோட்டத்தை தொடர்ந்து தேர் நிலைக்கு வருகிறது. அதன்பின், மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.