Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம் கோவில் சொத்து இருக்கு... கோவிலை தான் காணோம்! கோவில் சொத்து இருக்கு... கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நுாற்றாண்டு புடைப்பு சிற்பம்: உடுமலை அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
16ம் நுாற்றாண்டு புடைப்பு சிற்பம்: உடுமலை அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2025
01:06

உடுமலை: உடுமலை அருகே, ரோட்டோரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புடைப்பு சிற்பத்தை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்தனர்.


திருப்பூர் மாவட்டம், உடுமலை, பொள்ளாச்சி ரோடு, கணபதிபாளையம் பிரிவு பகுதியில், புளியமரத்தின் கீழ், புடைப்புச்சிற்பங்களுடன் கூடிய பெரிய அளவிலான கல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.


இதனையடுத்து, மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, ஆய்வாளர்கள் அருட்செல்வன், சிவகுமார் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:


இந்த சிலை கி.பி. 16 அல்லது, 17ம் நூற்றாண்டுகளில், பாளையக்காரர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இது மண்ணில் பகுதியளவு புதைந்துள்ளது. மண்ணிலிருந்து, மூன்றடி உயரமும், நான்கடி அகலமும் கொண்ட, பெரிய கல்லில் வேட்டைக்குச் செல்வது போன்ற உருவமும், கைகூப்பி வணங்குவது போன்ற தோற்றத்திலும் வடிக்கப்பட்டுள்ளது.


இதற்கு வலது புறத்தில், பொறிக்கப்பட்ட சிலை உள்ளது. இடப்பக்கத்தில் பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிலை, மார்புக்கச்சை இல்லாமலும், ஆபரணங்கள் எதுவும் இல்லாமலும் இருக்கிறது.


காதில் அணிகலன்கள், கை முத்திரையுடன் காணப்படுகிறது. முகம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தக் கல்லில் கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை.


இந்த சிலை, வைணவப்பெருமாள் கோயிலுக்கு வடிக்கப்பட்ட சிற்பங்களாக இருக்கலாம். அல்லது அருகாமையில் இருந்த கோவில் அழிந்திருக்கலாம். ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவி சிலையாக இருக்கலாம். இதனை வழிபாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு, கூறினார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar