திருப்பதி; வரும் ஜூலை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலையில் கருட பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மலையப்ப சுவாமி தனது விருப்பமான வாகனமான கருடனில் அன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட வாகனத்தில் சுவாமி தோன்றுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். திருமலையில் கருட பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் கோலாமாக கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமியில் சுவாமியை தரிசித்தால், புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், பெண்கள் தங்கள் குழந்தைகள் வலிமையாகவும், கருடனைப் போல நல்ல ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.