Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ... சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிக்கப்பட்ட அன்னதான கூடம்; தரையில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
இடிக்கப்பட்ட அன்னதான கூடம்; தரையில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
04:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில், இடிக்கப்பட்ட அன்னதான கூடம் மீண்டும் கட்டாததால், பக்தர்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கும் நிலை உள்ளது.


காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக அரசின், அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அன்னதான கூடம் இயங்கிய கட்டடம் பழுதானதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஆறு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. புதிய அன்னதான கூடத்திற்கான கட்டுமானப் பணி துவங்காததால், அன்னதான திட்டத்தின் கீழ், கோவிலுக்கு வரும் 50 பேருக்கு மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய மூலவர் சன்னிதிக்கு செல்லும் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அன்னதானம் சாப்பிடும் பக்தர்கள், நெருக்கடியான இடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிட சிரமப்படுகின்றனர். குறிப்பாக வயது மூப்பு காரணமாக, சில பக்தர்களால் கால்களை மடக்கி தரையில் அமர்ந்து சாப்பிட முடியாத சூழல் உள்ளது. மேலும், காற்றடிக்கும்போது பறக்கும் குப்பை, உணவில் வந்து விழும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ், பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வகையில், புதிதாக அன்னதான கூடத்தை கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். 


இதுகுறித்து காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவில் செயல் அலுவலர் சா.சி.ராஜமாணிக்கம் கூறியதாவது: சந்தவெளி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் சிதிலமடைந்த கட்டடத்தில் இயங்கிதால் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய அன்னதான கூடம் கட்டுவதற்காக கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அன்னதானகூடம் கட்டுமானப் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் ஸ்ரீவித்யா ஹோமம் ... மேலும்
 
temple news
புதுடில்லி: பிரதமர் மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் ... மேலும்
 
temple news
கூடலூர்; மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar