ஆண்டி பாலகர் கோயில் கும்பாபிஷேகம்; பந்தல் கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 11:08
மேலூர்; செமினிபட்டி ஆண்டி பாலகர் கோயில் கும்பாபிஷேகம் செப்.,4 ல் நடைபெற உள்ளது. இவ் விழாவை முன்னிட்டு நேற்று கோயில் முன்பு பந்தல்கால் நடும் விழா நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி மற்றும் கோயில் முன்பு ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இவ்விழாவில் தக்கார் மாலதி, சிவாச்சாரியார் ப்ரம்மஸ்ரீ சுந்தரேச ஷர்மா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.