Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு ... உத்திரமேரூர் கோவில்களில் தரிசனம் செய்த அமைச்சர் நேரு உத்திரமேரூர் கோவில்களில் தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து முழி அழகி ஆத்தாள் கோவில் திருவிழாவில் பழமை மாறாத படையல்
எழுத்தின் அளவு:
ஐந்து முழி அழகி ஆத்தாள் கோவில் திருவிழாவில் பழமை மாறாத படையல்

பதிவு செய்த நாள்

04 ஆக
2025
05:08

மேலூர்; வீரசூடாமணி பட்டியில் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். எட்டாம் நாள் முடிவான இன்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நேத்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் 90 க்கும் மேற்பட்ட ஆடுகளும், 900 க்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். தவிர முடி காணிக்கை செலுத்தினர். கோயில் முன்பு பெரியகுளத்தில் ஆடு மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டது. அதன் பிறகு மண் பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து வேப்ப இலைகளை போட்டு உப்பு போடாமல் அவித்து அம்மனுக்கு படையலிட்டனர். அதற்கு முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சர்க்கரையை இஸ்லாமியர் சக்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினார். பிறகு காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையல் இடப்பட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது. வேப்ப இலையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar