சுந்தராபுரம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு துவாதசி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 10:08
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது புதன்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வெண்பட்டு வஸ்திரத்தில் பெருமாளும் - மஞ்சள் நிற வஸ்திரத்தில் தாயாரும் துளசி மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.