Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.43 லட்சம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.43 லட்சம் பக்தர்கள் காணிக்கை

பதிவு செய்த நாள்

08 ஆக
2025
11:08

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.


கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். கடந்தாண்டு வாரம் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா நடந்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. ஆனைமலை‌ மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையிலும், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து, தன்னார்வலர்களும், வி.என்.கே., மகளிர் கல்லூரி மாணவிகள், காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில், 20 நிரந்தர உண்டியல்களில், 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 60 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், 14 லட்சம், 16 ஆயிரத்து, 934 ரூபாய் இருந்தது. திருவிழாவிற்காக தற்காலிகமாக வைத்த உண்டியலில், 6 லட்சத்து, 13 ஆயிரத்து, 626 ரூபாய் பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியலில் தங்கம், 58 கிராம், வெள்ளி, 90 கிராம் இருந்தது. மொத்த காணிக்கையாக, 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar