Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களுக்கு அருள்பாலித்து, ...
முதல் பக்கம் » துளிகள்
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில்
எழுத்தின் அளவு:
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில்

பதிவு செய்த நாள்

15 ஆக
2025
03:08

சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. சுயம்புவாக உருவான புற்றுக்கோவிலை, ஆரம்பத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரி மேஸ்திரி உள்ளிட்ட ஊர்மக்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து வழிபட துவங்கினர்.


அதன்பின், சிறிய அளவில் கோவில் கட்டி, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் என பெயர் சூட்டி, வழிபட்டனர். புற்றுக்கோவில் என அழைக்கப்படும், இக்கோவிலுக்கு வந்து, அம்மனை மனமுருகி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.




இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத திருவிழா, இசை கச்சேரி, கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா என வெகு சிறப்பாக நடக்கும். இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே மாதம், 23ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.




அன்று காலை, விநாயகர் பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தெய்வ விக்ரஹங்களுக்கு காப்பு பட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.




இதைதொடர்ந்து, இக்கோவிலில், 46ம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் 39ம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 17ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.




நிகழ்ச்சி நிரல்:




ஆக., 15: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. காலை 8:30 மணி காப்பு கட்டுதல்.10:00 மணி பூங்கரகம் வீதி உலா. பகம் 12:00 மணி அன்னதானம். மாலை 6:00 மணி அம்மன் வீதி உலா




ஆக., 16: அதிகாலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. பிற்பகல் 12:00 மணி அன்னதானம்




ஆக., 17: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. 11:00 மணி கூழ் வார்த்தல். மாலை 6:00 மணி தீமிதி திருவிழா.

 
மேலும் துளிகள் »
temple news
அ கத்தியமுனிவர் குடகுமலையில் ஓரிடத்தில் கமண்டலத்தை வைத்துவிட்டு லிங்க பூஜை செய்தார். அப்போது ஒரு ... மேலும்
 
temple news
அன்னை அருள்புரியும் திருத்தலங்கள் இப்பாரத பூமியில் பல உண்டு. அதில் முக்கியமாக 51 சக்தி பீடங்கள் என்று ... மேலும்
 
temple news
ஆனி,- ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை ... மேலும்
 
temple news
கடல் பார்க்க, கதிரவன் பார்க்க, காளையாம் நந்தி பார்க்க கிழக்கு முகம் நோக்கி, சிம்ம வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar