Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களுக்கு அருள்பாலித்து, ... பாவங்களை போக்கும் ஸ்ரீராமர் உருவாக்கிய கங்கை குளம் பாவங்களை போக்கும் ஸ்ரீராமர் ...
முதல் பக்கம் » துளிகள்
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில்
எழுத்தின் அளவு:
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில்

பதிவு செய்த நாள்

15 ஆக
2025
03:08

சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. சுயம்புவாக உருவான புற்றுக்கோவிலை, ஆரம்பத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரி மேஸ்திரி உள்ளிட்ட ஊர்மக்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து வழிபட துவங்கினர்.


அதன்பின், சிறிய அளவில் கோவில் கட்டி, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் என பெயர் சூட்டி, வழிபட்டனர். புற்றுக்கோவில் என அழைக்கப்படும், இக்கோவிலுக்கு வந்து, அம்மனை மனமுருகி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.




இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத திருவிழா, இசை கச்சேரி, கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா என வெகு சிறப்பாக நடக்கும். இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே மாதம், 23ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.




அன்று காலை, விநாயகர் பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தெய்வ விக்ரஹங்களுக்கு காப்பு பட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.




இதைதொடர்ந்து, இக்கோவிலில், 46ம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் 39ம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 17ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.




நிகழ்ச்சி நிரல்:




ஆக., 15: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. காலை 8:30 மணி காப்பு கட்டுதல்.10:00 மணி பூங்கரகம் வீதி உலா. பகம் 12:00 மணி அன்னதானம். மாலை 6:00 மணி அம்மன் வீதி உலா




ஆக., 16: அதிகாலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. பிற்பகல் 12:00 மணி அன்னதானம்




ஆக., 17: காலை 5:00 மணி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை. 11:00 மணி கூழ் வார்த்தல். மாலை 6:00 மணி தீமிதி திருவிழா.

 
மேலும் துளிகள் »
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் தர்மஸ்தலா. இங்கு தான் உலகப்புகழ் பெற்ற மஞ்சுநாத ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு டவுன் ஹலேஹூப்பள்ளியில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் குந்தாபூர் தாலுகா கமலாசிலே கிராமத்தில், பிராமி துர்கா ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாதேவி திருக்கோயில். இங்கே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar