Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முருகன் ... கோவை அருகே சத்பூஜை கொண்டாட்டம்; திரளான பெண்கள் பங்கேற்பு கோவை அருகே சத்பூஜை கொண்டாட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரும்பு, வாழையில் அலங்காரம்; கந்த சஷ்டி விழாவில் அபாரம்!
எழுத்தின் அளவு:
கரும்பு, வாழையில் அலங்காரம்; கந்த சஷ்டி விழாவில் அபாரம்!

பதிவு செய்த நாள்

29 அக்
2025
10:10

பல்லடம்; கரும்பு மற்றும் வாழை மரங்களால் தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா அபாரமாக நடந்தது.


ஹிந்து கடவுளான முருகனின் விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் முக்கியமானது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் இந்த விழா, முருகன் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்வுடன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு, பல்லடத்தில் பிரசித்தி பெற்ற மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, விழா முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, கோவில் நுழைவு வாயில், திருக்கல்யாண மண்டபம், சன்னதிக்குச் செல்லும் வழி, கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு மற்றும் வாழை மரங்களால் ஆன தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில், விழாக் குழுவின் இந்த செயல்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தில், மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும், வாகனங்களை முறையாக பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியதால், பார்க்கிங் பிரச்னை ஏற்படாத்தால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 


குறைகள் களையப்படுமா?; முத்துக்குமாரசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களின்போது கூடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு , கடந்த இரண்டு நாட்களாக நடந்த சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், பக்தர்கள் கை கழுவும் இடம் சேரும் சகதியுமானது. சாப்பிட்ட தட்டுகள், பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தன. காலணிகளை முறையாக வைக்க இடம் இன்றி, அரச மரத்தடி விநாயகர் அருகிலும், பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் விட்டு சென்றனர். இதனால், கோவில் கிரிவலப்பாதையின் பல இடங்களில் காலணிகளே அதிக அளவில் காணப்பட்டன. எனவே, காலணிகளை பாதுகாக்க இடம் அமைக்க வேண்டும். முறையான குடிநீர், கை கழுவும் வசதி ஏற்படுத்துவது அவசியம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் சரியான கழிப்பிட வசதி கிடையாது. கோவில் நுழையும் இடத்திலேயே உள்ள கழிப்பிடமும் சரிவர பராமரிப்பது இல்லை. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்தால், எதிர்வரும் நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதுடன், அறநிலையத்துறையின் செயல்பாடுகளை பக்தர்கள் மெச்சவும் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar