Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பதியில் புஷ்பயாகத்திற்காக ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 1008 இடங்களில் கோ பூஜை; ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
 திருப்பூர் மாவட்டத்தில் 1008 இடங்களில் கோ பூஜை; ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்

பதிவு செய்த நாள்

30 அக்
2025
11:10

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மற்றும் நகர் பகுதியில், 1,008 இடங்களில் கோ பூஜை சிறப்பாக நடந்தது.


தென் தமிழகம் கோ சேவா சமிதி, திருப்பூர் மாவட்டம் சார்பில், பாரம்பரியமான நாட்டு பசுக்களை கொண்டு கோ பூஜை மாதந்தோறும் நடத்தி வருகின்றனர். அஷ்டமி திதியில் கோபாஷ்டமி விழாவை கொண்டாடும் வகையில், கோ சேவா சமிதியினர் திருப்பூர் மாநகரம் உட்பட, 693 இடங்கள் உட்பட கோட்டம் முழுதும், ஆயிரத்து, 8 இடங்களில் பாரம்பரியமான நாட்டு இன பசுக்களை வைத்து கோ பூஜை விழா நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.


கோ சேவா சமிதியினர் கூறியதாவது: பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வின் வளர்ப்பு தந்தை ஸ்ரீ நந்தர், பிருந்தாவனத்தில் பசுக்களின் கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை குழந்தை கிருஷ்ணர் வசம் ஒப்படைத்திருந்தார். அப்போது, கிருஷ்ணருக்கு, ஐந்து வயது பூர்த்தியாகும் போது, மேய்ச்சல் நிலங்களுக்கு தனது சகோதரர் பலராமனுடன் பசுக்களை முதன் முதலில் மேய்ச்சலுக்கு அனுப்பும் நிகழ்வை, ஒரு விழாவாக கொண்டாடினர். அந்த நாளே, கோபாஷ்டமி. இதை வடமாநில முழுவதும் கொண்டாடப்படும் விழா, கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாட திருப்பூரில், நான்காம் ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு, தோட்டம், கோவில் என, 693 இடங்களில் நாட்டு பசுக்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். பெருமாநல்லுாரில், 120, செஞ்சேரி பகுதி – 160, பல்லடம் – 90, அவிநாசி – 72, பொங்கலுார் – 85, ஊத்துக்குளி – 90, திருப்பூர் மாநகர் – 55 மற்றும் பல்லடம் நகர் – 21 என, 693, தாராபுரத்தில், 180, கரூர் ஜில்லா, 145 என, ஆயிரத்து, 18 இடங்களில் நடந்தது. ஏராளமானோர் கோ பூஜையில் பங்கேற்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar