Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் அதிகாலை திருப்பதி பெருமாளை ... சஷ்டி விரதம் ; மனமுருகி வழிபட மகத்தான பலனை தருவார் முருகன்! சஷ்டி விரதம் ; மனமுருகி வழிபட மகத்தான ...
முதல் பக்கம் » துளிகள்
சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட இடையூறு நீக்கி இன்பம் பெருகும்!
எழுத்தின் அளவு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்;  விநாயகரை வழிபட இடையூறு நீக்கி இன்பம் பெருகும்!

பதிவு செய்த நாள்

08 நவ
2025
10:11

வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், அன்னதானம் செய்தல் சிறப்பைத்தரும். 


சதுர்த்தியின் மகிமை: சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

 
மேலும் துளிகள் »
temple news
‘முருகா’ என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும், முப்பெரும்தேவியர்களும் உடன் அமர்ந்து அருள்கிறார்கள். ... மேலும்
 
temple news
* காலத்தின் சக்தி எதையும் மாற்றி விடும். எதற்கும் கவலைப்படாதே. * தர்மப்படி வாழ்வு நடத்தினால் அதுவே ... மேலும்
 
temple news
* தேவையுள்ள இடத்திற்கு சென்று உதவுவதே ஆட்சியாளரின் பணி. * தாயும், தந்தையும் கண்கண்ட தெய்வங்கள்.  * ... மேலும்
 
temple news
இபமுகற்கு இளையாய் போற்றிஈனர்மால் களையாய் போற்றி சுப கவிப் புலவா போற்றி சுருதி நுால் வலவா போற்றி ... மேலும்
 
temple news
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.* நல்ல மனதுடன் இருந்தால் எல்லாம் உன் வசமாகும். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar