Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மண்டல கால மகரவிளக்கு சீசன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்; யானைகள் மீது பன்னிரு திருமுறைகள் வீதியுலா
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்; யானைகள் மீது பன்னிரு திருமுறைகள் வீதியுலா

பதிவு செய்த நாள்

11 நவ
2025
10:11

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் மேளதாள வாத்தியங்கள் முழங்க யானைகள் மீது பன்னிரு திருமுறைகளை வைத்து வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி துலா உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  கடந்த ஏழாம் தேதி பத்து நாள் உற்சவம் சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள்  தீர்த்தவாரி நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாயூரநாதர், வதான்யேஸ்வரர்  ஆலயங்களில் பன்னிரு திருமுறைகள் யானைகள் மீது வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில்   நடராஜர் உற்சவர் சன்னதியில் திருமுறைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூன்று யானைகள்  மீது திருமுறைகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. தருமபுரம் வேத சிவாகம தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறை விண்ணப்பத்தை பாடியவாறு முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற வீதி உலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில்  திருக்கோயில் கட்டளை  சிவகுருநாத தம்பிரான்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் மாயூரநாதர் ஆலயத்தில் பன்னிரு திருமுறைகளுக்கு மாயூரநாதர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பன்னிரு திருமுறைகள் அபயாம்பிகை யானை மீது ஏற்றி தேரோடும் வீதிகளில் வீதி உலா சென்றது. சிவபுரம் வேதாகம பாடசாலை மாணவர்கள் ஓதுவாமூர்த்தி சிவகுமார் தலைமையில் திருமுறைகள் தேவாரப் பாடல்கள் பாடி வீதி உலா சென்ற போது பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar