Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் அருளும் ஹோலே தேவம்மா காலபைரவாஷ்டமி; பைரவரை வழிபட துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்! காலபைரவாஷ்டமி; பைரவரை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
தம்பதியரிடையே ஒற்றுமையை அதிகரிக்கும் லட்சுமி வரதராஜர்
எழுத்தின் அளவு:
தம்பதியரிடையே ஒற்றுமையை அதிகரிக்கும் லட்சுமி வரதராஜர்

பதிவு செய்த நாள்

11 நவ
2025
11:11

கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் சாம்ராஜ்நகரில் உள்ள லட்சுமி வரதராஜசுவாமி கோவிலும் ஒன்றாகும்.


சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகாவின் தெரகனாம்பி கிராமத்தில் லட்சுமி வரதராஜர் கோவில் உள்ளது. புராதனமான இக்கோவில், விஜயநகர சாம்ராஜ்யத்தில் 1303 ல் கட்டப்பட்டது. அற்புதமான சிற்பக்கலைக்கு பெயர் பெற்றுள்ளது. பக்தர்களை தன் வசம் ஈர்க்கிறது.


கல் கம்பவங்கள் கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வரதராஜசுவாமி, லட்சுமிதேவியின் விக்ரகங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன், மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.


புராதன ஆவணங்களின்படி, இந்த விக்ரகங்கள் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் வளாகத்தில் விஜயநகர பாணி கல் கம்பங்கள், சிற்பங்களை பார்க்கலாம். இங்கு ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடன், ராமானுஜாச்சார்யா சன்னிதிகள் உள்ளன.


மூக்குத்தி ஒளி இக்கோவில் வைஷ்ணவ பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. 40 அடி உயர கல் கம்பத்தை காணலாம். இங்குள்ள கருடன் சிலையை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.


ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி, பிரம்ம ரத உற்சவம் உட்பட பண்டிகை நாட்களில் திரளான பக்தர்கள் வருகின்றனர். வரதராஜ சுவாமியை தரிசனம் செய்கின்றனர். புஷ்பக விமானத்தில் மஹா விஷ்ணு, உலக சஞ்சாரம் செல்லும் போது, பூலோகத்தில் லட்சுமி தேவி குளத்தில் குளிக்கிறார். அவரது மூக்குத்தியில் இருந்த பேரொளி, ஆகாயத்தில் செல்லும் மஹா விஷ்ணு முகத்தில் மோதி, முன்னோக்கி செல்ல விடாமல் தடுக்கிறது. பூமிக்கு வருகிறார். லட்சுமி தேவியை திருமணம் செய்து கொள்கிறார். எனவே இந்த தலத்துக்கு ‘லட்சுமி வரதராஜர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.


தினமும் கோவிலில் பூஜைகள், ஹோமங்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வந்து லட்சுமி வரதராஜ சுவாமியை தரிசித்தால், குடும்பத்தில் அமைதி ஏற்படும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கை கூடும் என்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar