Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதிஷ்டையின்போது அதிசயம் சிவனை 3 ... சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள் சுந்தரேஸ்வரர் பாடல்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கரிஞ்சேஸ்வரா கோவில்!
எழுத்தின் அளவு:
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கரிஞ்சேஸ்வரா கோவில்!

பதிவு செய்த நாள்

25 நவ
2025
03:11

தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, கரிஞ்சா கிராமத்தில் மலை உச்சியில் கரிஞ்சேஸ்வரா கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்து உள்ளது. கோவில் அமைந்துள்ள இடத்தில் க்ருதா யுகத்தில் ரிஷி முனிவர்கள் தவம் செய்தனர் என்றும், திரேதா யுகத்தில் ராமரும், சீதையும் இந்த இடத்திற்கு வருகை தந்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.


சிவன், தனது பக்தர்களுக்கு ஆசி வழங்க இந்த மலையின் மீது கரிஞ்சேஸ்வரராக எழுந்தளிருனார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.மலை உச்சியில் கோவில் இருப்பதால், அடிவாரத்தில் இருந்து 600 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் ஏறி செல்லும் போது சுற்றியுள்ள வனப்பகுதியின் அழகை ரசிக்கும் அனுபவம் கிடைக்கும்.


அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்ல 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. மொத்தம் 300 படிக்கட்டுகள் ஏறியதும் விநாயகர், பார்வதி தேவியை தரிசனம் செய்யலாம். கோவிலின் மேல், கீழ் பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.


இங்கு உள்ள கதா தீர்த்தத்தை, பீமன் தனது கதாயுதத்தின் மூலம் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. கோடை காலத்திலும் கதா தீர்த்தத்தில் தண்ணீர் இருக்கும். அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும் போது குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கும். இதனால் கவனமாக செல்ல வேண்டியது அவசியம். மஹா சிவராத்திரியை பெரிய பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் ரத உற்சவம் நடக்கிறது. தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.


எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து 328 கி.மீ.,யும், பன்ட்வாலில் இருந்து 12 கி.மீ.,யிலும் கோவில் அமைந்துள்ளது.

பெங்களூரில் இருந்து பஸ், ரயிலில் செல்வோர் பன்ட்வால் சென்று அங்கிருந்து ஆட்டோ, வாடகை கார் மூலம் செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பொம்மவாராவில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஆன்மிக ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம், பிடதியின் ஜதேனஹள்ளியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜேஸ்வரா சிவன் கோவில். இப்பகுதியில் ... மேலும்
 
temple news
பல கோவில்களுக்கு சென்று, தரிசனம் செய்திருந்தாலும், சில கோவில்களின் கட்டட அமைப்பு, நம் மனதில் அழியாமல் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar