Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ...
முதல் பக்கம் » துளிகள்
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 நவ
2025
03:11

பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பொம்மவாராவில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஆன்மிக தலம். இது, தேவனஹள்ளியின் ஆன்மிக உறுதி, தெய்வ நம்பிக்கையை பறைசாற்றுகிறது. 600 ஆண்டுகள் பழமையானது. மூலவராக சிவனின் அம்சமான சுந்தரேஸ்வரர், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த லிங்கத்தில் மனித முகம் போன்ற உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது வெள்ளி கவசத்தில் உள்ளது.


வரலாறு இந்த கவசமே தீய சக்திகளில் இருந்து பக்தர்களை பாதுகாக்கிறது என, பலரும் கருதுகின்றனர். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலத்தில், ஒரு முனிவர் தவம் செய்தார். அவருக்கு சிவபெருமானின் அருள் கிட்டியது. இதனால், அப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும், நாளடைவில் கோவிலாக மாறியதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.


இந்த கோவிலின் கல்வெட்டுகளிலும் பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. புராணங்களை கூறும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரருக்கு அழகின் எஜமான், கருணையின் வடிவம், நளனின் ஆதாரம் என பல பெயர்கள் உண்டு.


இவர் குறித்து மனம் உருகி பக்தர்கள் பாடும் பக்தி பாடல்களை, நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம். பார்வதி தேவியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தென்னிந்திய கட்டட கலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.


இங்கு மஹாசிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


கோவில் அமைந்துள்ள பகுதியில் மரங்கள் ஏராளம் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள், தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் வளாகம் உள்ளது. காலை 8:00 மணி முதல்- மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல்- இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, கரிஞ்சா கிராமத்தில் மலை உச்சியில் கரிஞ்சேஸ்வரா கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம், பிடதியின் ஜதேனஹள்ளியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜேஸ்வரா சிவன் கோவில். இப்பகுதியில் ... மேலும்
 
temple news
பல கோவில்களுக்கு சென்று, தரிசனம் செய்திருந்தாலும், சில கோவில்களின் கட்டட அமைப்பு, நம் மனதில் அழியாமல் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar