Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... திருவோணம், சஷ்டி விரதம்; பெருமாள், முருகனை வழிபட நல்ல திருப்பம் வரும்! திருவோணம், சஷ்டி விரதம்; பெருமாள், ...
முதல் பக்கம் » துளிகள்
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 நவ
2025
03:11

பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பொம்மவாராவில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஆன்மிக தலம். இது, தேவனஹள்ளியின் ஆன்மிக உறுதி, தெய்வ நம்பிக்கையை பறைசாற்றுகிறது. 600 ஆண்டுகள் பழமையானது. மூலவராக சிவனின் அம்சமான சுந்தரேஸ்வரர், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த லிங்கத்தில் மனித முகம் போன்ற உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது வெள்ளி கவசத்தில் உள்ளது.


வரலாறு இந்த கவசமே தீய சக்திகளில் இருந்து பக்தர்களை பாதுகாக்கிறது என, பலரும் கருதுகின்றனர். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலத்தில், ஒரு முனிவர் தவம் செய்தார். அவருக்கு சிவபெருமானின் அருள் கிட்டியது. இதனால், அப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும், நாளடைவில் கோவிலாக மாறியதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.


இந்த கோவிலின் கல்வெட்டுகளிலும் பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. புராணங்களை கூறும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரருக்கு அழகின் எஜமான், கருணையின் வடிவம், நளனின் ஆதாரம் என பல பெயர்கள் உண்டு.


இவர் குறித்து மனம் உருகி பக்தர்கள் பாடும் பக்தி பாடல்களை, நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம். பார்வதி தேவியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தென்னிந்திய கட்டட கலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.


இங்கு மஹாசிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


கோவில் அமைந்துள்ள பகுதியில் மரங்கள் ஏராளம் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள், தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் வளாகம் உள்ளது. காலை 8:00 மணி முதல்- மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல்- இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar