Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... மார்கழி மாத பிறப்பு : பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மார்கழி மாத பிறப்பு : பெருமாள் ...
முதல் பக்கம் » செய்திகள்
மார்கழி பிறந்தது; அதிகாலையில் காற்று.. வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்களுடன் மக்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
மார்கழி பிறந்தது; அதிகாலையில் காற்று.. வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்களுடன் மக்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

16 டிச
2025
10:12

மதுரை: அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது. அதிகாலை முதல் அனைத்து பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில், திருப்பாவை, திருவெம்பாவை முழங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


மார்கழியில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த சுத்தமான காற்று சுவாசத்திற்கு ஏற்றது. இறைவன் மீதான பஜனை பாடல்களை பாடவும், கேட்கவும், மாசில்லாத இயற்கை காற்றை சுவாசிக்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு, இந்த மாதத்தில் தான் வாய்க்கிறது.மார்கழி கோலத்தின் சிறப்பு, சாணம் தெளித்து கோலமிட்டு அதன் மேல் பூசணி பூ வைப்பது தான். அதனால், கிருமிகள் அகன்று நோய் தொற்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே, பூசணி பூ கோலத்தை பார்க்க முடிகிறது.பெரும்பாலான பெண்கள், அதிகாலையில் நீடிக்கும் அடர்த்தியான பனி பொழிவு மற்றும் மர்ம நபர்களின் நகை பறிப்பு காரணமாக, முன் இரவிலேயே கோலம் போட்டு விடுகின்றனர்.


மார்கழித் திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இந்த மாதம் முழுவதும் நாம் செய்யும் தெய்வ வழிபாடுகள். பண்மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.  அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் படித்து வைத்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும்  மார்கழியின் ஸ்பெஷல். முற்காலத்தில் எல்லோரு வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை கல்யாணத்துக்காக காத்திரு க்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து  கொள்வர். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.


மார்கழியின் மற்றொரு சிறப்பம்சம் திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவது. திருப்பாவையை அருளியது ஆண்டாள். திருவெம்பாவை  மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. இவை இரண்டுமே பாவை நூல்கள். இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இந்த நூல்களின் முதல் பாடல்களில், ஆண்டாள் தனது  திருப்பாவையில் மா என்ற எழுத்தைக் கொண்டு மார்கழித் திங்கள்.... எனத் துவங்குகிறாள். இது மாணிக்க வாசகரை நினைவுப்படுத்துகிறது. அவரோ ஆ என்ற  எழுத்தை முன்வைத்து ஆதியும் அந்தமும்... என்று தொடங்குகிறார். இது ஆண்டாளைச் சிறப்பிக்கிறது எனச் சிலாகிப்பார்கள் ஆராய்ச்சி அறிஞர்கள்.

 
மேலும் செய்திகள் »
temple news
புதுச்சேரி: ஆத்ம சமர்ப்பணம் செய்து எம்பெருமானை உள்ளத்தில் கொள்ள வேண்டும் என, ஓய்வு பெற்ற நீதிபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தேசமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடந்தது. உப்பளம், நேத்தாஜி ... மேலும்
 
temple news
குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி கர்நாடக இசைக் கலைஞர் பூஜா சுரேஷ். இவர், மந்தாரி வர்ணம், ஆதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி பெருவிழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
திட்டக்குடி: மார்கழி மாதத்தையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆண்டாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar