Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடப்பு மண்டல காலத்தில் சபரிமலை ... சபரிமலைக்கு புல்மேடு பாதையில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு சபரிமலைக்கு புல்மேடு பாதையில் வரும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரி கைது
எழுத்தின் அளவு:
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரி கைது

பதிவு செய்த நாள்

18 டிச
2025
03:12

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பாக இருந்த துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும் போது, துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் உட்பட ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்ரீகுமார் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் செயலர் ஜெயஸ்ரீ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் ஜெயஸ்ரீ கைதாவார் என எதிர்பார்க்கபடுகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar