Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ... வல்லக்கோட்டை முருகன் கோவில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழிவின் விளிம்பில் தேசிய புராதன சின்னங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
11:01

மதுரை: மதுரையில், தேசிய புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருவதை தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை. மதுரையில் அரிட்டாபட்டி, ஆனைமலை, செக்கானூரணி, திண்டியூர், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புராதான சின்னங்கள் உள்ளன. இங்கு 16 மற்றும் 19ம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்ததற்காக அழியாப்புகழ் கொண்ட சிலைகள், கல் படுகைகள், வட்டெழுத்துக்களின் அடையாளங்கள் உள்ளன. இவை, தேசிய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு, அத்துமீறி நுழைவோர், சின்னங்களை சிதைப்போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது தொல்லியல் துறை பாதுகாப்பு சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அழியும் தேசிய சின்னம்: அரிட்டாபட்டி, கீழவளவில் உள்ள தேசிய சின்னங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்காக சிதைக்கப்பட்டுள்ளன. கிராம மக்களின் கடும் எதிர்ப்பால், பாதி சிதையுண்ட நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஒத்தக்கடையில் உள்ள பிரமாண்டமான யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஒத்தக்கடை, நரசிங்கபுரம், திருமோகூர், ராஜகம்பீரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அம்முயற்சி கைவிடப்பட்டது.

மது அருந்தும் கொடுமை: புகழ்பெற்ற யானைமலை சமணர் கல் படுகைகளில் ஹாயாக... படுத்துக் கொண்டு மது அருந்தி நாசம் செய்வது தொடர்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சமணர் படுகைக்கு செல்ல முடியாமல், முகம் சுளித்தபடி பாதியிலேயே திரும்பி செல்லும் அவலம் நிகழ்கிறது. எனினும், வேறுவழியின்றி சமணர் கோயிலில் உள்ள மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகிய தெய்வங்களை சிரமத்தின் பேரில் தரிசனம் செய்கின்றனர்.

குமுறும் சுற்றுலா பயணிகள்: மோகன், வங்கி மேலாளர், தேனி: புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய வந்தேன். நடக்க முடியாதபடி நெடுகிலும் அசிங்கம். தேசிய புராதன சின்னம் பாதுகாப்பின்றி இருப்பது வேதனைக்குரியது. இதனால், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சிரமம் அடைவர். தேசிய சின்னத்தை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை.

மூர்த்தி, துபாய்: இங்குள்ள சிலைகளில் பூசப்பட்டுள்ள வர்ணங்கள் காலத்தால் அழியாதவை. புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் கோயில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. அதுபோல் யானைமலை சமணர் கோயிலையும் பாதுகாக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar