Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகர விளக்கு கால பூஜைகளுக்காக ... சபரிமலையில் நெய்யபிஷேகம் தொடக்கம்; 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் நெய்யபிஷேகம் தொடக்கம்; 24 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; 14ம் தேதி மகரஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; 14ம் தேதி மகரஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2025
10:12

சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.


கடந்த 27-ல் மண்டல பூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று மாலை 5:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடைதிறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். இரவு 11.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 3:30 முதல் 11:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 14- ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக 11-ல் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் எருமேலியில் நடைபெறுகிறது. 12-ல் பந்தளத்தில் இருந்து திருபா ரணம் புறப்படும். மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்களின் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 13 மற்றும் 14 தேதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர். ஸ்பாட் புக்கிங் இரண்டாயமாக குறைக்கப்படும் என்று என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar