Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகர விளக்கு கால பூஜைகளுக்காக ... அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் சொன்னதை விட அதிகம் அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நெய்யபிஷேகம் தொடக்கம்; 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நெய்யபிஷேகம் தொடக்கம்; 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
08:01

 சபரிமலை: மகர விளக்கு கால பூ ஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3: 15 மணிக்கு தொடங்கியது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன.14 ல் நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 256 பக்தர்கள் சன்னிதானம் வந்தனர். 30- ம் தேதி 57 ஆயிரத்து 256 பேர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5:00 மணி வரை 63 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கியது. 3:00 மணிக்கு நடை திறந்து அபி ஷேகம் நடத்திய பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.நேற்று மதியம் மகர விளக்குகால முதல் களபாபிஷேகம் நடந்தது.

மகர விளக்கு காலத்தில் முதற்கட்ட பாதுகாப்பு பணிகளுக்காக 10 டி. எஸ். பி., 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ., ஏட்டு உட்பட 1593 போலீசார் சன்னிதானத்தில் பொறுப்பேற்றுள்ளனர். தனி அதிகாரியாக எஸ். பி., எம் .கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜன. 14 ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் தெரியும். புல்மேடு சம்பவம் எதிரொலி யாக மகர ஜோதி நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். அன்றைய தினத்தில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar