Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ... உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஜக்கம்மாள் வழிபாடு உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்சேலை உடுத்தி தொழு முன் பொங்கலிட்ட பெண்கள்; ரூ.20,000க்கு ஏலம் போன ஒரு கரும்பு!
எழுத்தின் அளவு:
வெண்சேலை உடுத்தி தொழு முன் பொங்கலிட்ட பெண்கள்; ரூ.20,000க்கு ஏலம் போன ஒரு கரும்பு!

பதிவு செய்த நாள்

17 ஜன
2026
11:01

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மேலத்தெருவில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மாட்டு தொழு முன் பொங்கலிட்டு வழிபட்டனர்.


மதகுபட்டி அருகே உள்ள மேலத்தெரு கிராமத்தில் முத்தரையர் சமுதாயத்தினர் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தை 2ம் தேதி மாட்டு பொங்கலன்று பச்சை நாச்சியம்மன், சூலபிடாரியம்மனுக்கு விரதம் துவக்கி, தொழு முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அந்த வகையில் நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு முன்பே பெண்கள் விரதத்தை துவக்கினர். விரத காலங்களில் வீட்டில் உணவுகளை தாழிக்க மாட்டார்கள். அதே போன்று வெண் சேலை உடுத்தி, பொன் நகைகள் அணியாமல் விரதத்தை கடுமையாக மேற்கொள்வார்கள். விரத காலங்களில் அசைவ உணவுகள் வாசனையே மேலத்தெரு கிராமத்தில் இருக்காது. நேற்று காலை 8:00 மணிக்கு வெண்சேலை உடுத்திய 35 பெண்கள் பொங்கல் பானையை ஊர்வலமாக எடுத்து வந்து, தொழு முன் வெண் பொங்கலிட்டு பச்சை நாச்சியம்மன், சூலபிடாரி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.


இதன் மூலம் உழவுக்கு கைகொடுக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த விழாவை நடத்தினர். கரும்பு ஒன்று ரூ.20,000க்கு ஏலம் இக்கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய கரும்பு, எலுமிச்சம் பழங்களை ஏலம் விடுவார்கள். அந்த வகையில் நேற்று மாலை 4:00 மணிக்கு கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வந்த 240 கரும்புகளை ஏலம் விட்டனர். முதலில் விடப்பட்ட கரும்பை மலைச்சாமி என்பவர் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு கரும்பும் ரூ.10 ஆயிரம் வரை ஏலம் போனது. இன்று கோயிலுக்கு வந்த எலுமிச்சம் பழத்தை ஏலம் விடுவார்கள். இக்கோயிலுக்கு வரும் கரும்பு, எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுப்பவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் போட்டி போட்டு கொண்டு கரும்பு, எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுப்பார்கள். விழா ஏற்பாட்டை மேலத்தெரு கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar